தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

மனச்சாட்சி மரணித்ததா?.. ஆதியும்

த.சு.மணியம்

மனச்சாட்சி மரணித்ததா?..ஆதியும் அகதியாய்!
!
01.!
மனச்சாட்சி மரணித்ததா?!
------------------------------------------!
தேடுகுது இரத்தமொன்று தெருவில் நின்று!
தெரிந்தபடி போதையினில் மகனும் இங்கே!
பாடுகுது தன்மகனின் நாமம் சொல்லி!
பாவியுமோ நினைப்பதில்லை பாவம் எண்ணி!
கூடுகுது வீட்டினிலே தினமும் கூட்டம்!
குடித்தபடி பேசுவதோ சுடலை ஞானம்!
வாடுகுது தண்ணியில்லாப் பயிரும் அங்கே!
வாந்தி வந்து கொட்டுகிறான் மதுவாய் இங்கே.!
நேற்றுவரை பேசிநின்றான் தெரிந்தே ஞானம்!
நேசமுள்ள நாடெனவே குடித்தான் மோசம்!
காற்றுவந்து சலசலத்துப் போகும் நாளும்!
காணவில்லை பகலினினை இவனின் வாழ்வும்!
ஊற்றுகின்ற தண்ணீரில் உரிமை காணும்!
உன்னதமாம்,சொல்லுவதோ அவனின் வாயும்!
நேற்றிருந்த அவன் வீட்டுக் கொட்டில் பேசும்!
நேசமுள்ள தாய்மனத்தின் அவல வாழ்வும்.!
நல்லமகன் காத்திடுவான் நினைவில் நாளும்!
நம்பியவள் பார்த்திருந்தாள் தினமும் சோகம்!
வல்லவனாய் வாழவைக்க உழைத்த ஊனும்!
வலிமையற்றுப் போனதுதான் காணும் மீதம்!
சொல்லுதற்கோ எண்ணுகிறாள் போகப் பாரம்!
சொந்தமகன் என்பதனால் நாடும் மௌனம்!
கொல்லுமவன் மனச்சாட்சி ஓர்நாள் என்றும்!
கொள்கையுடன் காத்திருக்காள் தெருவில்!
இன்றும்.!
!
02.!
ஆதியும் அகதியாய்...!!
-------------------------------!
பனி படர்ந்த பாறையுடன் காடும் மேடும்!
பாதியது உயிர் துறக்க அவற்றைத் தாண்டி!
தனித்தனியே இரவு பகல் முள்ளில் தூங்கி!
தஞ்சமென பொருள் காவும் பெட்டியேறி!
இனி வாழ்வும் இதற்குள்ளா முடியும் ஏங்கி!
இறைவனது நல்லருளால் நாடும் கண்டு!
குனியாத தலையுமது குனிந்து கூனி!
குடிவரவும் கிடைக்கவென எதுதான் கோலம்.!
பூசுகின்ற திருநீறால் புனிதர் காட்டி!
புதியதொரு பெயர் தேட கோயில் கட்டி!
வீசுகின்ற பக்தரவர் பணத்தையெல்லாம்!
வித்தகங்கள் காட்டும் பல தர்மகர்த்தா!
மாசுடைய செயல் தெரிந்தும் மடியில் போட!
மாற்றுவழி ஏதறியா பக்தர் ஏங்க!
தேசுடைய கடவுளுமோ நீதி மன்றில்!
தேங்கியவர் அழுதபடி நிற்கும் கோலம்.!
சாமியுமோ அகதியென மனுக்கொடுத்து!
சங்கதிகள் ஏதறியா மன்றில் நிற்க!
பூமியிலே தாம் புனிதர் எனவும் சொல்லி!
புதுப்புதிதாய் அறிக்கைகளும் இதழ்கள் காவ!
பினாமிகளும் வகை தொகையாய் நாளும் கூட!
பிறந்துவிடும் கோயில் பல வீதிதோறும்!
சுனாமியது உங்களையேன் தேடவில்லை!
சுற்றியது அழித்திருப்பின் இதுவேன் கோலம்.!
-த.சு.மணியம்

சமீபத்திய கவிதை

கலையும் கனவு

சு.மு.அகமது

ஓர்
நாட்காட்டியின் மாற்றம் மட்டுமே
புது வருடத்தின் பிரகடனமாகிறது

கரைந்து போன நினைவுகள்
கனத்துப் போனது போல்
மீண்டும் விம்மிப்புடைத்து
கலையத்துவங்குகிறது
மரணத்தின் புது துவக்கம்

மறு மரணம் வரை பயணிக்க
ஒரு நாட்காட்டி தேவைப்படுகிறது

வாழ்க்கை
கரையும் கற்பூரமாய்
நாட்களை குதறும்  தன் கூரிய பற்களால்

கடைசியில்
மிஞ்சி நிற்பது-எதிர்பார்ப்பு
கலைந்து போன கனவாய்

குறிப்பில்லாக் கவிதை (random)

உயிர்த்து எழு.. அழைக்கும்.. அழகு

சின்னு (சிவப்பிரகாசம்)

உயிர்த்து எழு.. அழைக்கும் அழகு.. அழகுச் சிலை!
01.!
உயிர்த்து எழு!
------------------!
சிறு நாடி ஓடாத!
சிலை தானே என்றாலும்!
குறை நாடி காணாத!
குறுங்காலன் என் மனதில்!
கொடி போல படர்ந்தாயே!
விளையாட விண்ணை நாடி!
விண்மீனில் உனைத் தேடி!
கனவுகளில் கரம் பிடித்து!
காலடியில் உன் நிழல் தேடும்!
காதலினால் சொல்கிறேன்!
நெடு வாயும் கொடு வாயும்!
கோமகளின் சிறு வாயில்!
குறை ஏதும் காணாது!
சிறு இடையில் குறை காண!
முயன்றும் முடியாது அடங்கியதால்!
உனைத் தேடும் கூட்டம்!
இல்லாது போனதா இங்கு!
கோல் நாடிய கரமும்!
குடை நாடிய சிகையும்!
ஒளி நாடிய முகமும்!
உனை நாடிய மனதை!
வா என்று சொல்லாது!
அசையாமல் நின்றாலும்!
அமைதியாய் போக!
என் மனம் மறுக்கிறது!
கோடையிலும்!
அந்தி மாலையிலும்!
யாருக்காய் நிற்கிறாய்!
ஆண்டாண்டு காலமாய்!
கோ மகன்கள் இன்று இல்லை!
கோ மகளே உனை மணக்க!
இரண்டு மணம் புரிந்து விட்ட!
திருமுருகன் பூவுலகில் இல்லை!
சிலையான செம்பொண்னே!
எனை உயிர்பிக்க!
நீ உயிர்த்து எழு!
!
02.!
அழைக்கும் அழகு!
------------------------!
மதிய நேரத்தில் - அவள்!
மயக்கும் விழிகள்!
நினைவு வர!
தயக்கம் தடுத்தாலும்!
மயக்கம் தொடுத்ததால்!
கைபேசி மூலம் - அவள்!
பொன்மொழி கேட்க!
கைபேசி அழைத்தேன்!
அவள் வாய்மொழி கேட்க!
வாய்ப்பு கிடைக்கவில்லை!
அழைத்த அழைப்புக்கு!
அவள் விடையும் கிடைக்கவில்லை!
கோபத்தில் கொதிக்கும்!
வெறுத்த உள்ளம்!
மதிய வேளையில்!
மீதி வேளைக்கு!
விடுமுறை கொடுத்து!
இல்லம் ஓடினேன் .!
அவளை வாய்மொழி மூலம்!
வறுத்து எடுக்க!
இல்லம் புகுந்து!
அவள் முகம் தேடி!
உறங்கும் அவளை!
ஒற்றன் போல் நோக்கிட!
சாம்பல் நிற தாமரை!
உறங்கும் அழகுச் சிலை!
என் சத்தத்தில் எழுந்து!
இரு கை தூக்கி!
சோம்பல் முறிக்க!
கோபம் மறைந்து!
அவள் கோலம் அழைக்க!
விடியலில் துவங்கிய - அவள்!
உறங்கும் இரவை!
மதியத்தில் முடித்து!
உறக்கம் தொலைத்த!
நேற்றைய இரவின்!
இன்றைய தொடக்கத்தை!
துவங்கினேன்!
அவள் அழகில் மயங்கி !
!
03.!
அழகுச் சிலை!
---------------------!
அழகுச் சிலை ஒன்று!
அணிகள் பல கொண்டு!
ஒளியில் நிழல் கண்டு!
உலாவும் காட்சி கண்டீரோ!
இலக்கிய நடை அறிந்தோன்!
உரைக்கக் கேட்டு!
செதுக்கிய சிலையோ இது!
சித்திரைச் சாவடியில்!
சிலிர்க்கும் அழகியிணை!
காணக் குளிருதே கண்கள்!
இயக்கம் ஏதுமற்ற!
உலகம் இதுவென்று!
சொல்லத் துடிக்குதே மனம்!
தூறல் தொடங்கியதும்!
தென்றல் ஓடினால்!
நாட்டிய மண்டபம் இது!
நிழல் குடை கண்டவுடன்!
நின்று பார்க்கிறாள்!
அழகுச் சிலை தான் அவள்!
இந்திரனின் சுந்தரிகள்!
இயன்றவரை முயன்றாலும்!
அழகு என்றால் இது!
சுந்தரனின் சொப்பனத்தில் அவள்!
வந்தா செய்தான் இதை!
!
வான் கொண்ட மதி முகத்தை!
மனதில் கொண்டா செய்தான் இதை!
!
மனிதனின் கை படைத்த!
மன்மதச்சிற்பம் இது!
அன்னம் கொண்ட தோள்களில்!
ஆடை செய்யும் நாட்டியம்!
காணக் கண் போதுமோ!
கம்பில் வைத்த கரத்தின்!
அழகை முழுதாய்ச் சொல்ல!
என் ஆயுள் தான் போதுமா!
இயல் இசை நாட்டிய மேடை!
அவள் இடையினை சூழ்ந்துள்ள ஆடை!
தென்றல் பாட!
அசைந்திடும் அவள் மேலாடை!
அழகு என்றால் இது!
கங்கை கொண்டச் சோழபுர!
அழகுச் சிலை தான் இது